×

நாகை கலெக்டர் தகவல் சீர்காழி அருகே வாய்க்காலில் லாரி கவிழ்ந்தது

சீர்காழி, ஜன.10: சீர்காழி அருகே கருங்கல் ஏற்றி வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.விழுப்புரத்தை அடுத்த திருக்கனூர் பகுதியிலிருந்து தரங்கம்பாடி கடற்கரையில் துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கருங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று சீர்காழி அருகே மேலச் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வாய்க்காலில் லாரி கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த மணப்பாறை புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரன் (35) என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Naga Collector Information Disposal ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...