×

மனைவி மீது சந்தேகம் கணவன் தூக்கிட்டு தற்கொலை

கொள்ளிடம், ஜன.10: கொள்ளிடம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரகிராமம் பெரிய தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கஜேந்திரன்(55), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலையரசி (50). கஜேந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த கஜேந்திரன் நேற்று வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள குப்பை பிரிக்கும் கொட்டைகைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த கொள்ளிடம் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை