×

மயிலாடுதுறை நகராட்சிக்கு பொதுமக்கள் கண்டனம் திருமணமான 7 மாதத்தில் பெண் விஷம் குடித்து சாவு

வேதாரண்யம், ஜன.10: வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம், மருதூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மின்மணி (25). இவர் வேதாரண்யம் அடுத்துள்ள நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுகாரரான ராஜா என்பவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ராஜா மருதூர் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.கணவன், மனைவி இருவரும் மருதூர் தெற்கு கிராமத்தில் உள்ள மின்மணி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மின்மணி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆகிறது. இந்நிலையில் மின்மணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் கடந்த 7.1.2020 அன்று வீட்டிலிருந்த விஷமருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் தீவிர சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்து விட்டார். மின்மணியின் தாயார் கண்ணகி கொடுத்த புகாரின்பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை செய்தார். மேலும் திருமணமாகி 7 மாதங்களை ஆனதால் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.



Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...