×

காணொலி மூலம் கவர்னர் இன்று குறைகேட்பு

காரைக்கால், ஜன. 10: காரைக்கால் கலெக்டர் விக்ராந்த் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கவர்னர் கிரண்பேடி, தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். அதேபோல், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5  முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (10ம் தேதி) மாலை இந்த நிகழ்வு நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், இன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலகத்தில் புகார்களை எழுத்து வடிவில் கொண்டுவந்து, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Governor ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...