×

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்

புதுச்சேரி, ஜன. 10: புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் பள்ளிக்கல்வி இயக்கத்தின் சமக்கர சிக்ஷா சார்பில் வானவில் என்ற பெயரில் (ரங்க உட்சவ்) மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று காலை தொடங்கியது. நோடல் அதிகாரி பாஸ்கர ராசு தலைமை தாங்கினார். சமக்கர சிக்ஷா மாநில திட்ட இயக்குனர் தினகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். வாய்ப்பாட்டு, ஓவியம், பாரம்பரிய உடையுடன் மாறுவேடம், இசைக்கருவி மீட்டல், நாடகம், நடனம், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் அரசு பள்ளி, ஜவகர் சிறுவர் இல்லங்களை சேர்ந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்தந்த துறையின் வல்லுநர்கள் நடுவராக பணியாற்றி சிறந்தவர்களை தேர்வு செய்தனர்.இதனை தொடர்ந்து இன்று (10ம் தேதி) முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பால்பவன் பயிற்றுனர்களுக்கும் போட்டிகள் நடக்கின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் வரும் 19ம் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் நாராயணசாமி பரிசுகளை வழங்குகிறார். ஏற்பாடுகளை பால்பவன் பயிற்றுனர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : schoolchildren ,
× RELATED நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு