×

தற்கொலைக்கு தூண்டியதாக பட்டதாரி வாலிபர் கைது

சின்னசேலம், ஐன. 10: சின்னசேலம் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.  சின்னசேலம் அருகே நைனார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் ஐஸ்வர்யா(21). இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎட் படிப்பு படித்து வந்தார். மேலும் ஐஸ்வர்யா நமசிவாயபுரத்தில் உள்ள தனது தாய்மாமன் வீட்டில் தங்கி படித்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டு வாலிபர் விவேக்(26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விவேக் பட்டதாரியாவார். இந்நிலையில் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களுடைய காதல் கடந்த ஒரு ஆண்டாக நீடித்துள்ளது.  

 இந்நிலையில் ஐஸ்வர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் முறை இல்லை என்று கூறி விவேக் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த ஐஸ்வர்யா கடந்த 26ம் தேதி எலிபேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனால் விவேக்கை கைது செய்ய வேண்டும் என்று ஐஸ்வர்யாவின் உறவினர்கள் சடலத்துடன் சாலைமறியல் போராட்டம் செய்தனர். இதுகுறித்து கோவிந்தராஜ் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விவேக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...