×

களியக்காவிளை அருகே ஆற்றில் மூழ்கி 2 கேரள வாலிபர்கள் பலி செல்பி எடுக்க முயன்றபோது விபரீதம்

களியக்காவிளை, ஜன.10: கேரள மாநிலம் ஆற்றிங்கல் அருகே எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் அஸ்வின்(19). இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் அபய்(19) என்பவரும் நேற்று கலை பைக்கில் களியக்காவிளைக்கு வந்துள்ளனர். களியக்காவிளை பகுதியில் உள்ள நண்பர்களுடன் இணைந்து மடிச்சல் பகுதியில் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். பாறக்கடவு பகுதியில் சென்று தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது அஸ்வின் ஆற்றின் கரையில் உள்ள உயர்ந்த பாறையில் ஏறி செல்பி எடுக்க சென்றுள்ளார். செல்பி எடுக்கும் போது கால் இடறி பாறையின் மேல் இருந்து ஆற்றில் விழுந்தார். இதை பார்த்த அபய், அஸ்வினை காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதை கவனித்த நண்பர்கள் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்டனர். உடனடியாக இருவரும் களியக்காவிளை பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kerala ,river ,Kaliyakkavil ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...