×

ஜன.12 மற்றும் 13ம் தேதிகளில் சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு 3 தேர்வு மையங்களில் நடக்கிறது

விருதுநகர், ஜன. 9: விருதுநகர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு, 3 மையங்களில் வருகிற ஜன.12 மற்றும் 13ம் தேதிகளில் நடக்கிறது என எஸ்பி பெருமாள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 969 ஆண், பெண் நேரடி சார்பு ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பித்த நபர்களுக்கான எழுத்து தேர்வு ஜன.12ல் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் விபிஎம் கல்வி நிறுவனம் ஆகிய இரண்டு  மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. காவல்துறையில் பணிபுரியும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஜன.13ம் தேதி விருதுநகர் ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரியில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வினை பொது விண்ணப்பதாரர்கள் 5,192 பேர், காவல்துறையில் பணியாற்றுவோர் 707 பேர் என மொத்தம் 5,899 பேர் எழுத உள்ளனர். எழுத்து தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் காலை 8 மணி முதல் அனுமதிக்கப்படுவர். ஹால் டிக்கெட் மற்றும் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். பரிசோதனைக்கு  பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதியில்லை. பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Pro-Analyst ,exam centers ,
× RELATED நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்