×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு சிவகாசியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஜன. 9: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ரவீந்திரன் தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். நீதிமன்றத்தின் பிரதான வாயில் முன்பு சுமார் 30 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகு, அவர்கள் கலைந்து சென்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் பெறப்படும் வரை தங்களின் போராட்டம் தினமும் இதேபோல் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

Tags : Sivakasi ,lawyers ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...