×

செக் மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர்,ஜன. 9: திருவில்லிபுத்தூர் வாங்கிய கடனுக்கு செக் வழங்கி மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள திருவண்ணாமலை சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவர், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த அழகர்சாமி (50) என்பவருக்கு, கடந்த 2018 ஆக.27ல் ரூ.2.5 லட்சம் கடன் வழங்கினார். இதற்காக அழகர்சாமியிடமிருந்து காசோலை வாங்கினார். அதை வங்கியில் கலெக்ஷனுக்கு போட்டபோது, பணம் இல்லாமல் அது திரும்பி வந்தது. இது குறித்து திருவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் சின்னராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரகாச பூபதி, காசோலை வழங்கி மோசடி செய்த அழகர்சாமிக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags : jail ,Czech ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!