×

நத்தம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கோட்டாட்சியர் விசாரணை

நத்தம், ஜன. 9: நத்தம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். நத்தம் அருகே வத்திபட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மீனா (23). கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மீனா கடந்த ஜன.1ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மீனா உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

Tags : family dispute ,Nadam ,
× RELATED அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை...