×

திண்டுக்கல்லில் ஈரோடு டிரைவர் மர்ம சாவு

திண்டுக்கல், ஜன. 9: திண்டுக்கல்லில் ஈரோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சங்ககிரி அருகே மதலைக்காடு பகுதியை சேர்ந்தவர் சேசுராஜ் (57). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இருந்து வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலைக்கு நூல் சுற்றும் கோன் ஏற்றி கொண்டு திண்டுக்கல் வழியாக சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் திண்டுக்கல்- தாடிக்கொம்பு சாலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சர்வீஸ் சாலையில் உணவு அருந்தி விட்டு லாரி மேல் படுத்து உறங்கியுள்ளார்.

நேற்று காலை 8.30 மணியளவில் உதவியாளர் இளங்கோ (31) லாரியை சுத்தப்படுத்தி விட்டு லாரியின் மேலே சென்று சேசுராஜை எழுப்பியுள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த இளங்கோ அருகில் இருந்தவர்கள் உதவியை நாடினார். உடனே அவர்கள் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சேசுராஜை பரிசோதித்ததில் இறந்து விட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Erode ,Dindigul ,
× RELATED ஈரோட்டில் அனுமதியின்றி பிசினெஸ்...