×

ஆயிரம் ரூபாய் கடனுக்கு ₹5,000 கேட்டு தாய், மகன் மீது தாக்குதல் நடத்திய கந்துவட்டி கும்பல்

ஓமலூர், ஜன.9: ஓமலூர் அருகே ஆயிரம் ரூபாய் கடனுக்கு ₹5,000 கேட்டு தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பல் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ஓமலூர் அருகேயுள்ள ஊ.மாரங்கலம் ஊராட்சி பாரப்பட்டியை சேர்ந்தவர் ரவி(40). கூலித்தொழிலாளியான இவரது மனைவி இந்திராமணி(35). இவர்களுக்கு கிருஷ்ணன் என்ற மகனும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இந்திராணி தனது வீட்டு செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ₹5 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதில், வட்டியுடன் சேர்த்து ₹4 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, ₹1000 கடன் பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மீதமுள்ள ஆயிரம் பணத்திற்கு, வட்டியுடன் சேர்த்து ₹5 ஆயிரம் தர வேண்டும் என சுரேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு இந்திராணி ஆயிரம் மட்டுமே தன்னால் கொடுக்க முடியும் என கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்திராமணியின் வீட்டிற்கு சென்ற சுரேஷ் மற்றும் சிலர், இந்திராணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் கிருஷ்ணனையும் அடித்து உதைத்து, வீட்டில் இருந்த டூவீலரை பறித்து சென்றுள்ளனர். அவர்களது தாக்குதலில் காயமடைந்த இருவரும், ஓமலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தங்களை தாக்கிய கந்துவட்டி கும்பலை கைது செய்ய வேண்டும் என இந்திராணியின் குடும்பத்தினர் ஓமலூர் போலீசில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரம் ரூபாய் கடனுக்கு ₹5 ஆயிரம் கேட்டு தாய் மற்றும் மகனை கந்துவட்டி கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : gang ,gangsters ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...