×

ராசிபுரத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

ராசிபுரம், ஜன.9: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று, வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் ஆண்டளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி காலை, மதியம் என இரு வேளையாக செயல்படுகிறது. நேற்று காலை இந்த கல்லூரியின் மாணவ, மாணவிகள், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பாக போராட்டம் நடத்தினர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

Tags : government college students ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து