×

போச்சம்பள்ளியில் பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

போச்சம்பள்ளி, ஜன.9:  போச்சம்பள்ளியில் மின்சாரம் தாக்கி மின் ஊழியர் படுகாயமடைந்தார். அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தவமணி (45). பணி மாறுதல் பெற்று போச்சம்பள்ளி அருகே ஜிங்கல் கதிரம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று, தாதம்பட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதை தொடர்ந்து தவமணி டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. அதுசமயம் தவமணி தூக்கி வீசப்பட்டு, டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கிய படி கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், உடனடியாக மின் வாரியத்தினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு விரைந்து வந்த மின்வாரியத்தினர், தவமணியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கட்டு வருகிறது. இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : electrocution ,Pochampalli ,
× RELATED தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு