×

ஊத்தங்கரை அருகே சமையல் செய்த போது

கேஸ் சிலிண்டர் வெடித்ததுஊத்தங்கரை, ஜன.9:  ஊத்தங்கரை அடுத்த கதவணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எளச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன்(40) கூலி தொழிலாளி. நேற்று முன்தினம், அவரது கோடீஸ்வரனின் தாய் முருகம்மாள்(65) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், காலை 11 மணியளவில் முருகம்மாள் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென  சமையல் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகம்மாள், வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து அக்கம் பக்கத்தினரிடையே  தெரிவித்தார். சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறி, வீட்டில் தீப்பற்றியது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி, கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த சில பொருட்கள் கருகியது. இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uthangarai ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது