×

பொங்கலையொட்டி கால்நடைகளுக்கான பொருட்கள் விற்பனை

போச்சம்பள்ளி, ஜன.9:  போச்சம்பள்ளியில் பொங்கல் பண்டிகையையொட்டி, கால்நடைகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை, வருகிற 15ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, போச்சம்பள்ளி பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான சலங்கை, கயிறு, சாட்டை, மூக்கணாங்கயிறு உள்ளிட்ட பொருட்கள் யாவும், தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தற்போது போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளுக்கான அலங்கார பொருட்கள் விற்பனை ஜோராக உள்ளது. இவற்றை திரளான விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு