×

ஓசூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், ஜன.9:  மின்துறையை பொது துறையாக பாதுகாக்க வலியுறுத்தி, ஓசூரில் மின் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு, நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சிங்காரவேலு, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநிலச்செயலாளர் சௌந்தர்ராஜன், எல்பிஎப் செயலாளர் பாலகிருஷ்ணன், ஐக்கிய சங்க கோட்ட செயலாளர் ராஜசேகரன், பொறியாளர் அமைப்பு மாவட்ட செயலாளர் துரை, மகளிர் அமைப்பு சரஸ்வதி, லாவண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

Tags : Staff Demonstration ,Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...