×

நிலத்தகராறில் 3 பேர் காயம் 4 பேர் மீது வழக்கு

ஒரத்தநாடு, ஜன. 9: ஒரத்தநாடு அருகே நிலத்தகராறு தொடர்பாக இரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தகராறில் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு போலீஸ் சரகத்தை சேர்ந்த சங்கரநாதர் குடிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு சொந்தமான வயலில் தென்னங்கன்றுகள் பயிரிடுவதற்காக குழிகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது முத்துசாமியின் பக்கத்து வீட்டுக்காரரும் அதே ஊரை சேர்ந்தவருமான கலைவாணன் என்பவருக்கும் முத்துசாமிக்கும் வயலில் எல்லை சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இந்த சம்பவம் தொடர்பாக முத்துசாமி, அவரது மகன் கர்ணன் ஆகியோர் மீதும் கலைவாணன் மற்றும் அவரது மனைவி சித்திரைச்செல்வி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோதலில் காயமடைந்த முத்துசாமி, கலைவாணன், சித்திரைச்செல்வி ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

Tags : persons ,land attack ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...