பாபநாசம், ஜன. 9: பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. இதில் 60 மாணவர்களுக்கு பாடநூல், குறிப்பேடு, சீருடைகள் வழங்கப்பட்டன. பாபநாசம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன், பள்ளி மேலாண்மை குழு குர்ஷிதா பானு, பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.