×

திருக்காட்டுப்பள்ளி அருகே தங்க மோதிரம் திருடிய பெண் மீது வழக்கு

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 9: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி கருப்பையன் (68). இவர் தனது வயலில் உள்ள பம்புசெட்டில் 2018ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி குளிக்கும்போது தனது கையில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் வெள்ளைக்கல் மோதிரத்தை கழட்டி அருகே வைத்திருந்தார். பின்னர் குளித்து விட்டு பார்த்தபோது மோதிரத்தை காணவில்லை. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள அடகு கடையில் வேலைபார்த்து தற்போது நின்றுவிட்ட அதே ஊரை சேர்ந்த ஒருவர், திருட்டு போன மோதிரத்தை முல்லைக்குடி கீழகுடியானத்தெரு சங்கரன் மனைவி சுமதி (47) என்பவர் கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி அடகு வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திருவையாறு குற்றவியல் நீதிமன்றத்தில் கருப்பையன் வழக்கு தாக்கல் செய்தார். இதுகுறித்து நீதிமன்ற வழிகாட்டல் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Tirukkattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளியில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி