×

கலெக்டர் அறிவுறுத்தல் ஜெயங்கொண்டம் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஜெயங்கொண்டம், ஜன. 9: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதேபோல் செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடி வனத்தீஸ்வரர், புதுச்சாவடி கல்யாண சுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர். திருத்துளார் அருளுடைய நாதர்.வீரசோழபுரம் கைலாசநாதர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தத. இதில் நந்தியம்பெருமானுக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமாலைநாதர் கோயில்களில் நந்தியம்பெருமானின் பிரகார உலா நடந்தது.

Tags : Collector ,area ,temples ,Jayankondam ,Shiva ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...