×

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாரிகள் விதித்த அபராதத்தை கட்ட தவறினால் பதிவு சான்று ரத்து கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

பெரம்பலூர், ஜன.9: பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் விதி த்த அபராத தொகையை செலுத்தாத கடைகளின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையாளரின் உத்தரவின்படி பெரம்ப லூர் மாவட்ட நியமன அலு வலருக்கு, உணவுப் பாது காப்புதர சட்ட விதிகளை மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறு மளிகைக் கடைகள், நடமாடும் தள்ளுவண்டி கடைகள், தற்காலிகமாக கடை நடத்துபவர்களிடம் சோதனை நடத்தும்போது முதல்முறை குற்றம் புரிந் தால் ரூ1,000, 2ம்முறை ரூ 2,000, 3ம்முறை ரூ3,000 என குற்றத்துக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டி ற்கு 12லட்சம் ரூபாய்க்குக் கீழ் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் குறு, சிறு தயாரிப்பாளர்கள் முதல்முறை குற்றத்தில் ஈடுபட்டால் அபராத தொ கை ரூ.3,000, 2ம் முறை ரூ.6,000, 3ம் முறை ரூ.10,000 என அபராதம் விதிக்கப் படும்.

3 முறைக்கு மேல் அதே குற்றம் செய்தால் பதிவு சான்று ரத்து செய்ய ப்படும். நாள் ஒன்று க்கு 500 லிட்டர் பால் விற்பனை செய்ப வர்கள், இறைச்சி விற்பனை செய்ப வர்கள் முதல் முறை யாக உணவுப் பாதுகாப்பு சட்ட மீறல் குற் றம் புரிந்தால் ரூ2,000, 2ம் முறை ரூ4,000, 3ம்முறை ரூ10,000 அபராதம் விதிக் கப்ப டும். பதிவுச் சான்று ரத்துசெய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அபராத தொகையை 3 வேலை நாட்களுக்குள் செலுத்துச்சீட்டு மூலம் அரசு கணக்கில் வங்கியில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு வணி கத்தின் பதிவுச் சான்று தற் காலிகமாக ரத்து செய்யப்ப டும். உணவுப்பொருட்களி ன் விற்பனை நிறுத்தி வைக்கப்படும். மேலும் உணவுப் பொருட்களில் கலப்படம், கலப்பட டீத்தூள், கலப்பட எண்ணெய், அளவுக்கு அதி கமாக செயற்கை நிறமி கலந்த உணவுப் பொருட் கள், தரமற்ற உணவு, தரம் குறைவு, தடை செய்யப் பட் ட புகையிலைப் பொருட் கள் விற்பது பற்றியும் புகார் அளிக்கலாம் எனத் தெரி வித்துள்ளார்.

Tags : district ,shop owners ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்