×

மின்வாரிய பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜன. 9: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் கழகம் சார்பில் உடுமலை ஏரிபாளையத்தில் உள்ள தலைமை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நேற்று மின்சார சட்ட திருத்தத்தை கைவிடக் கோரி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. உடுமலை கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மின்வாரிய பொறியாளர் கோதண்ட தில்லைமுத்து தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மோகன்ராஜ், அறம்பரத்தன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே, பொதுத்துறை சொத்துக்களை தனியார்மயம் ஆக்காதே, மின் வாரியங்களை பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்பட வழிவிடு, மின்சார சட்ட திருத்தத்தை கைவிடு, தமிழக அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்து செயல்படுத்து, வாரிய கொள்கைகளை மாற்றியமைக்க தன்னிச்சையாக செயல்படாதே என்பன உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Electrical Engineers Demonstration ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ