×

போதை விழிப்புணர்வு பிரசாரம்

பந்தலூர், ஜன.9:பந்தலூர் அருகே கூவமூலை ஆதிவாசி காலனியில் போதை விழிப்புணர்வு பிரசாரம்  நடைப்பெற்றது.  கூவமூலை ஆதிவாசி காலனியில் போதை வாஸ்துகள் பயன்பாடு மற்றும் மது போதையில் இருந்து விடுபடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் காந்தி அமைதி மையம் சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்தி அமைதி மையம் செயலாளர் சுமதி, ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், சிவபிரகாஷ். நெல்லியாளம் நகராட்சி பணியாளர்கள் பிரகாஷ், சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டு மது போதையினால் ஏற்படும் தீமைகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும்  அறிகுறிகள் குறித்து விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.




Tags : Drug awareness campaigns ,
× RELATED கூடலூர் அருகே காட்டு யானைகளிடம்...