×

குன்னூரில் பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது

ஊட்டி, ஜன. 9:தஞ்சாவூரிலிருந்து ஊட்டிக்கு வந்து பைக்குகளை திருடிச் செல்ல முயன்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.   குன்னூர் வெலிங்டன் போலீசார் ஊட்டி - குன்னூர் சாலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  அப்போது, அவர்கள் மூவரும் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த உதயநிதி (20), முகமது அஸான்(20), தினேஷ்(20) என்பதும், அவர்கள் ஊட்டியில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்று பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. தஞ்சை மாவட்ட போலீசாருக்கு 3 பேரின் புகைப்படங்களையும் அனுப்பி போலீசார் விசாரித்தனர். அப்போது, ஏற்கனவே இவர்கள் 3 பேரும் தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் பைக்குகளை திருடி விற்பனை செய்ததும், இது தொடர்பாக அங்கு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

Tags : Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...