×

பொன்னமராவதியில் டூ வீலரை எரித்தவர்மீது போலீசில் புகார்

பொன்னமராவதி, ஜன.9:  பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டியை சேர்ந்தவர் சேவுகன் மகன் விஜய் (29). இவர் கடந்த 30ம் தேதி செம்பொட்டல் அருகே மதுபானக்கடையில் மது அருந்தியபோது, மணப்பட்டி சாலையில் பிரியாணி கடை வைத்திருக்கும் அப்துல்காதர் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது விஜய் தனது டிவிஎஸ் மொபட்டை அங்கேயே விட்டு விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து இரு சக்கர வாகனத்தை எடுக்க சென்றபோது வாகனம் எரிக்கப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் விஜய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...