×

ஒரு ஆண்டாக நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்கம் பொன்னமராவதி பகுதி மக்கள் மகிழ்ச்சி

பொன்னமராவதி,ஜன.9: பொன்னமராவதியில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட அரசு பேருந்து இயக்கபட்டது. இதனால் பொன்னமராவதி பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொன்னமராவதி முரையூர், சூரக்குடி வழியாக சென்ற அரசு பேருந்து ஒரு வருடமாக இயக்கம் நிறுத்தி வதிக்கப்பட்டது. இரவில் மதுரையிலிருந்து பொன்னமராவதிக்கு வரமுடியாமல் அவதியுற்ற வந்த பொதுமக்கள் நீண்ட நாளாக அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் அதே வழித்தடத்தில் நேற்று முதல் போக்குவரத்து இயக்கப்பட்டது, நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : area ,Ponnamaravathi ,
× RELATED வாட்டி வதைக்கும்...