×

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் தீர்மானம்

பொன்னமராவதி,ஜன.9: பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க தாலுகா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் சிதம்பரம், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், பொன்னமராவதி அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி தரமான மருந்து மாத்திரைகள் வழங்க வேண்டும், பொன்னமராவதியில் அனைத்து அலுவலகங்கள் இருந்தும் நீதிமன்றம் இல்லமால் இருக்கின்றது. எனவே மாஜிட்ரேட் நீதிமன்றம் அமைக்க வேண்டும், மாவட்ட கட்டிடம் கட்ட நிதி சேகரிப்பது, அதிக உறுப்பினர்கள் சேர்ப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் இயக்கப்பட்டது. இதில் ஆசிரியர் ராமன், கருவூல கணக்குத்துறை குழந்தைவேல், விஏஓ.சுப்பு, ஆசிரியர் ரெங்கசாமி, வருவாய்த்துறை கமலநாதன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற அனைத்து துறையினர் பங்குபெற்றனர்.

Tags :
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...