×

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

சத்தியமங்கலம், ஜன.9: பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மல்லேசன் மகன் ஜவகர்ராஜா (21). இவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஜவகர்ராஜா, நேற்று மாலை கல்லூரி முடிந்தபின் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு செல்ல வெளியே வந்தவர், உடன் படிக்கும் 3 மாணவர்களுடன் சேர்ந்து அருகே உள்ள சிவியார்பாளையம் பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, ஜவகர்ராஜா ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி மாயமானதால் உடன் வந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆற்றில் இறங்கி நீண்டநேரம் தேடி ஜவகர்ராஜாவின் உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : College student ,Bhavani river ,
× RELATED பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்