×

பயணிகள் எதிர்பார்ப்பு கரூர் பேருந்து நிலையத்தில் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை முறையாக பராமரிக்கப்படுமா?


கரூர், ஜன. 9: கரூர் பேரூந்து நிலையத்தில் உள்ள தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை பாதுகாப்பான முறையில் பராமரித்திட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுதும் அனைத்து பேரூந்து நிலைய வளாகங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை ஒதுக்கப்பட்டு பல மாதங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.கரூர் பேருந்து நிலையத்திலும் பெண்களுக்கு என அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறை வளாகம் போதிய பாதுகாப்பின்றி உள்ளது.பெண்கள் எளிதாக உள்ளே செல்ல முடியாத நிலைதான் நிலவி வருகிறது. பெரும்பாலானோர் இந்த வளாகத்தை சுற்றிலும் அமர்ந்து கொள்வதால் பெண்கள் யாரும் இதனை பயன்படுத்துவதில்லை.
எனவே, இந்த அறை பகுதியை சுற்றிலும் காணும் நிலையை கவனத்தில் கொண்டு, பெண்கள் இதனை பயன்படுத்திட தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நோக்கத்துக்காக இந்த அறை கொண்டு வரப்பட்டதோ? அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Travelers ,lactation room ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...