×

லாரி மோதி வாலிபர் பலி

கடையநல்லூர், ஜன. 9:  செங்கோட்டை கேசி ரோட்டை சேர்ந்த சங்கர் மகன் இசக்கித்துரை (19). கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று புளியங்குடியில் நண்பரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சொக்கம்பட்டி வளைவு அருகே செல்லும்போது கொல்லத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற டேங்கர் லாரி, இசக்கித்துரையின் பைக் பின்னால் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்த சொக்கம்பட்டி எஸ்ஐ வேல்பாண்டி, தனிப்பிரிவு ஏட்டு மருதுபாண்டி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த இசக்கித்துரையை மீட்டு கடையநல்லூர் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இசக்கித்துரை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வீரப்பகவுண்டர் மகன் அன்பழகனிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lorry ,youngster ,
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...