×

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி மாற்றுத்திறனாளி மாணவன் பலி

ஆரணி, ஜன.9: ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு பகுதியில் ஜிவஜோதி மாற்றுத்திறனாளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில்  முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தயாளன் மகன் கோகுல்(14) என்பவர், 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் பள்ளி அருகில் உள்ள ஏரியில் கோகுல் சடலமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : student ,lake ,Arani ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு