கயத்தாறு ஜன.9: கயத்தாறு அருகே உள்ள தெற்கு ஆத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கவேல் (78). இவரது மனைவி பாப்பம்மாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சுடலைமணி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். தங்கவேலு கடந்த சில வருடங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த தங்கவேல் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கயத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.