×

முதியவர் தற்கொலை

கயத்தாறு ஜன.9: கயத்தாறு அருகே உள்ள தெற்கு ஆத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கவேல் (78). இவரது மனைவி பாப்பம்மாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சுடலைமணி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். தங்கவேலு கடந்த சில வருடங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த தங்கவேல் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து  கயத்தாறு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை