×

வீடுபுகுந்து பெண்ணுக்கு மிரட்டல்

சாத்தான்குளம், ஜன.9:  சாத்தான்குளம் அருகே உள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ்(45). பில்டிங் கான்ட்ராக்டர். அதே பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்ராஜ்(66). முன்னாள் ஊர் தலைவர். ஊர் கணக்கு வரவு செலவு கேட்டது தொடர்பாக வர்க்கீஸ், அல்போன்ஸ்ராஜ் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அல்போன்ஸ்ராஜ் மற்றும் அவரது மகன்கள் அந்தோணி சுரேஷ் (27), அந்தோணி விக்னேஷ்(23) ஆகிய 3 பேரும் வர்க்கீஸ் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். வீட்டில் வர்க்கீஸ் இல்லை. அவரது மனைவி நிஸாந்திபிரீத்தி (27) மட்டும் இருந்தார். இதையடுத்து 3 பேரும் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் தட்டார்மடம் எஸ்.ஐ. பால்துரை வழக்கு பதிந்து அல்போன்ஸ்ராஜ், அவரது மகன் அந்தோணி சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார். அந்தோணி விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...