உடன்குடி,ஜன.9: உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோயிலில் திருவாதிரை திருவிழா தொடங்கியது. இக்கோயிலில் ஜன.1ம் தேதி கணபதி ஹோமம் பூஜையுடன் திருவாதிரை திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், நடராஜ பெருமான், மீனாட்சி சுந்தரேசருக்கு சிறப்பு வழிபாடுகள், திருவெம்பாவை பாராயணம் உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகிறது. திருவாதிரை திருவிழாவான நாளை (ஜன.10ம் தேதி) ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜமூர்த்தி, சிவகாமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பசு தீபாராதனை, தாண்டவ தீபாராதனை நடக்கிறது.