×

காரிமங்கலம் அருகே புதுப்பெண் மாயம்

தர்மபுரி, ஜன.8: காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி அருணா(22). இவர்களுக்கு திருமணமாகி நான்கு மாதம் ஆகிறது. அருணா காரிமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி கல்லூரி செல்வதாக கூறி விட்டு சென்ற அருணா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, கோவிந்தராஜ் காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : karimangalam ,
× RELATED அரசு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை