×

கோட்டை பெருமாள் கோயிலில் துவாதசி விருந்து

தர்மபுரி, ஜன.8: துவாதசியை முன்னிட்டு தர்மபுரி கோட்டை பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கானோருக்கு துவாதசி விருந்து அளிக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை அடுத்த நாளான துவாதசியை முன்னிட்டு, தர்மபுரி கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோயிலில் நேற்று துவாதசி விருந்து நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பரவாசுதேவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. பகல் 12 மணியளவில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு துவாதசி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி கமிஷனர் பிரகாஷ், செயல் அலுவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். தர்மபுரி மண்டபத்தெருவில் உள்ள கல் மண்டபத்தில், ஸ்ரீ ராதாருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால் உற்சவர்களுக்கு நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதையடுத்து கல் மண்டபத்தில் துவாதசி விருந்து நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விருந்து சாப்பிட்டனர். இதேபோல் சொர்க்க வாசல் திறக்கப்பட்ட, பல்வேறு பெருமாள் கோயில்களில் துவாதசி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags : Fort Perumal Temple ,
× RELATED சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வரும் 23ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு