×

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த மக்கள்

தர்மபுரி, ஜன.8:  தர்மபுரி மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்தல் நேரத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம், மனுக்கள் அளிப்பது நடைபெறவில்லை. இந்நிலையில், நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் தளர்வு செய்துள்ளதால் நேற்று முன்தினம் முதல் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலக, விஏஒ அலுவலங்களில் மனுக்கள் பெற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கம்போல் திங்கட்கிழமை குறைகேட்பு முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திங்கட்கிழமை குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் நேற்று ஏராளமான மக்கள் மனு அளிக்க வந்தனர்.

Tags : Families ,Office ,Dharmapuri Collector ,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....