ஊத்தங்கரை, ஜன.8: ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் தம்ருத் (60). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பர்சில் வைத்து, கடை மேஜை டிராயரில் வைத்திருந்தார். அப்போது,கடைக்கு டூவீலரில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் தம்ருத்திடம் சிகரெட் கேட்டுள்ளனர். சிகரெட் எடுக்க தம்ருத் மேஜை டிராயரை திறக்கும்போது, அதில் பர்ஸ் இருப்பதை அந்த நபர்கள் பார்த்தனர். பின்னர் அவர், தம்ருத்திடம் நைசாக பேசி, கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து டிராயரில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றனர். பின்னர் தம்ருத் சங்கிலியை பார்த்த போது அங்கு காணதது கண்டு திடுகிட்டார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் கடைக்கு டூவீலரில் வந்த 2 நபர்கள் தான் 3 பவுன் தங்க சங்கிலியை திருடிசென்றதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.