மானூர், ஜன.8: மானூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மானூர் அருகே கட்டாரங்குளத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் பிரபு என்ற பிச்சையாபாண்டியன் (20). திருவனந்தபுரத்தில் பாஸ்ட் புட் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்துள்ள இவர், நாளை கோயிலுக்கு செல்வதற்காக பூஜைக்கு பனைஓலைகளை வெட்ட சென்றார். அப்போது காற்றாலை மின்சார வயர்பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பிச்சையாபாண்டியன் உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர்.