×

மானூரில் பிளஸ்2 மாணவி மாயம்

மானூர், ஜன.8: ரஸ்தாவை அடுத்துள்ள மதவக்குறிச்சியைச் சேர்ந்தவர் பட்டன் (37). இவரது மகள் இந்துஜாசுந்தரி (17). இவர் மானூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 6ம்தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளியில் விசாரித்ததில் பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்தது. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் மானூர் போலீசில் பட்டன் கொடுத்தார். எஸ்.ஐ நித்யா வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது