×

வரத்து கால்வாய் அடைப்பால் வறண்டு கிடக்கும் பச்சைநாயக்கன் குளம்

தென்காசி, ஜன.8: தென்காசி நகரத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கிய பச்சைநாயக்கன் குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கால்வாய்களும் அடைபட்ட நிலையில் தண்ணீர் வரத்து இல்லாததால் குளம் வறண்டு முள்செடிகளும், குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.  தென்காசி நகரில் மேட்டுபகுதிகளான மலையான் தெரு, பாறையடித் தெரு, மவுண்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு பச்சைநாயக்கன் குளம் சீரமைக்கப்படாதது முக்கிய காரணமாகும். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் குளம் தூர்வாரப்படவில்லை. மேலும் தண்ணீர் வரும் பாதைகளும் அடைபட்ட நிலையில் இருப்பதால் பல ஆண்டுகளாக குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. எனவே வரத்து கால்வாய்களை சீரமைப்பதுடன் பச்சைநாயக்கன் குளத்தையும் குடிமராமத்து பணி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...