×

விகேபுரம் அருகே சிவந்திபுரத்தில் மழையால் விழுந்த மரத்தின் கிளைகள் அகற்றம்

வி.கே.புரம், ஜன.8: தினகரன் செய்தி எதிரொலியாக சிவந்திபுரத்தில் மழையால் விழுந்த மரத்தின் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.விகேபுரம் அருகே சிவந்திபுரத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் மெயின் ரோட்டிலுள்ள மரம் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதித்தது. உடனடியாக வருவாய் துறையினர் பொது மக்களோடு இணைந்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தி அருகிலேயே விட்டுச் சென்றனர். அத்துடன் பாதுகாப்பு கருதி அருகிலிருந்த ேமலும் 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். ஆனால் இந்த மரக்கிளைகளை சாலையின் அருகிலேயே விட்டுச் சென்றனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மரங்கிளைகளுக்கு அடியில் சிவந்திபுரம் ஊராட்சிலுள்ள வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் இணைப்பு குழாய்களும் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்க முடியாத வகையில் மரக்கிளைகள் உள்ளதால் 200 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து கடந்த 18ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட துறையினர் மரக்கிளைகளை ஏலம் விட்டனர். ஏலம் எடுத்தவர்கள் மரக்கிளைகளை அப்புறப்படுத்தினார்கள்.

Tags : Removal ,Vaikapuram ,Sivanthipuram ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...