×

வைகுண்ட ஏகாதசி வள்ளியூர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

வள்ளியூர், ஜன.8: வள்ளியூர் சுந்தரபரிபூர்ண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வள்ளியூர் சுந்தரபரிபூர்ண பெருமாள் கோயிலில் ஏகாதசி திருவிழா கடந்த வாரம் துவங்கியது. இதையொட்டி தினமும் காலை பூஜை பாடல் பாடி சுவாமிக்கு பூஜைகளும் தொடர்ந்து மாலையில் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு சொர்க்காவாசல் திறக்கப்பட்டது. சுவாமி உள் பிரகாரத்தை 3 முறை ஆடி பாடி வலம் வந்து அனந்த சயனத்தில் அமர்ந்தார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொர்க்க வாசல் வழியாக வந்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Tags : Opening Ceremony ,Vaikunda Ekadasi Valliyoor Perumal Temple ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா