×

சேரன்மகாதேவியில் இலவச ஓவிய பயிற்சிக்கு ஜன.12ல் நுழைவுத்தேர்வு

வீரவநல்லூர், ஜன. 8: சேரன்மகாதேவி கவின் கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இலவச ஓவியப் பயிற்சியில் சேர ஜன.12ல் நுழைவுத்தேர்வு நடக்கிறது.  சேரன்மகாதேவி கவின் கலைக்கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக விடுமுறை நாள்களில் 6 மாத இலவச ஓவியப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான இலவச ஓவியப்பயிற்சி வரும் 25ம் தேதி  துவங்கவுள்ளது. இந்த இலவச ஓவியப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கான நுழைவுத் தேர்வு வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள திருச்செந்தூர் தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள, மாணவர்கள் நுழைவுத்தேர்வில் பங்கேற்கலாம். நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைளில் இலவசமாக ஓவியப் பயிற்சி வழங்கப்படும். ஓவியம் வரையும் திறமையுள்ள, திறமையை வளர்த்துக் கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என சப்-கலெக்டர் பிரதிக்தயாள் தெரிவித்துள்ளார்.

Tags : painting workshop ,
× RELATED திட்டச்சேரி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஓவியம் கைவினை பயிற்சி பட்டறை