×

கடையநல்லூர் குளத்தில் முதியவர் உடல்

நெல்லை, ஜன.8: கடையநல்லூரில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற முதியவர் குளத்தில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செவல்விளையைச் தெருவை சேர்ந்தவர் முருகையா (68). இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். ஆனால் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் முருகையாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள நெடுங்குளத்தில் ஆண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சென்று உடலை மீட்டனர். விசாரணையில் இறந்து கிடந்தது முருகையா என்பது தெரியவந்தது. அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தார என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags : Kadayanallur ,pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...