×

சாத்தான்குளம் அருகே மாயமான வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்பு

சாத்தான்குளம், ஜன.8: சாத்தான்குளம் அருகே மாயமான வாலிபர், கிணற்றில் பிணமாக கிடந்தார். மதுபோதையில் கிணற்றில் விழுந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.  சாத்தான்குளம் அருகே உள்ள சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ஞானசவுந்திரம் மகன் ஜஸ்டின்சாலமோன் (38). இவரது மனைவி பூமணி(35). திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. சாலமோன் மற்றும் அவரது சகோதரர்கள் வள்ளியூரில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகின்றனர். இதனால் தினமும் வெல்டிங் பட்டறைக்கு சென்று திரும்புவது வழக்கம். கடந்த 5ம் தேதி ஜஸ்டின் சாலமோன், சவேரியார்புரத்தில் உள்ள தோட்டத்தில் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஞானசவுந்திரம் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் தர் விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததால் அவர் கிணற்றில் விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை தோட்டத்து கிணற்றில் சாலமோன் உடல் மிதந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் அவர் கிணற்றில் விழுந்து இறந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : Funeral rescue ,magician ,Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...