×

2 கோயில்களில் உண்டியல் பணம் வீட்டினுள் புகுந்து நகைகள் திருட்டு

துறையூர், ஜன.8: துறையூர் அருகே உப்பிலியாபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எரகுடி கிராமத்தில் தெற்குத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை கரிகாலி அருகே தூக்கி வீசிவிட்டு கொள்ளையர்கள் சென்றுள்ளனர். இதுபோல் கோட்டபாளையத்தில் உள்ள தெற்கு மாரியம்மன் கோயில் தெற்குவிஸ்வாள்சமுத்திரம் மாரியம்மன் கோயில் ஆகிய இடத்தில் மர்ம நபர்கள் உண்டியலை திருடிச் சென்று அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் சோபனபுரம் ரெட்டி குட்டையை சேர்ந்த ராஜம்மாள் வயது 70 என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகள் வெள்ளி குத்து விளக்கு 4 ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் துறையூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு வந்த ராஜம்மாள் இன்று தன்னுடைய வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு உள்ளே பார்த்தபோது தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இந்த திருட்டுச் சம்பவங்கள் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இப்பகுதி மக்களிடையே அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

Tags : jewelery ,temples ,
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...