திருச்சி, ஜன.8: மணிகண்டம் ஒன்றியம், புங்கனூர் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 8வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜயனும், 9வது வார்டில் போட்டியிட்ட செல்வராணியும் கணவன், மனைவி ஆவார்கள். இவர்கள் இருவரும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த பதவியேற்பு விழாவில் இருவரும் வார்டு உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.